Breaking News

கிறிஸ்ட்சர்ச் நகைக்கடையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் இருவர் கைது...!!!

கிறிஸ்ட்சர்ச் நகைக்கடையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் இருவர் கைது...!!!

இந்த வாரம் கிறிஸ்ட்சர்ச் நகைக்கடையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திங்கள்கிழமை நண்பகல் வேளையில் Merivale புறநகரில் உள்ள Papanui சாலையில் உள்ள கடையில் சுத்தியலைக் காட்டி மிரட்டி மூன்று பேர் கொள்ளையில் ஈடுபட்டனர்.

19 வயதுடைய இருவர் கிறிஸ்ட்சர்ச்சில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது கடுமையான கொள்ளைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒருவர் மீது சட்டவிரோதமாக மோட்டார் வாகனத்தில் ஏறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மூன்றாவது நபரை அடையாளம் காண விசாரணை நடைபெற்று வருகிறது