Breaking News

முதல்வர் மாலத்தீவு செல்வதாக வெளியான தகவல் தவறு: திமுக

முதல்வர் மாலத்தீவு செல்வதாக வெளியான தகவல் தவறு: திமுக

இந்தியா: தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலத்தீவுக்கு செல்வதாக வெளியான தகவல் தவறானது என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதற்காக கடந்த மார்ச் மாதம் இறுதி முதல், ஏப்ரல் 16 ஆம் திகதி வரை முதல்வர் மு.க.ஸ்டாலின் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதன்பின், கடந்த சில தினங்களாக திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து, கள நிலவரம் குறித்து பேசி வருகிறார். இந்நிலையில், அவர்வரும் ஏப்ரல் 29 முதல் மே 7 ஆம் திகதி வரை மாலத்தீவுக்கு ஓய்வெடுக்கச்செல்வதாக தகவல் வெளியானது. ஆனால், இது தவறான தகவல் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.