சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல ஜயசேகர காலமானார்
சிரேஷ்ட ஊடகவியலாளரும், முன்னாள் இராஜதந்திர அதிகாரியுமான பந்துல ஜயசேகர இன்று அதிகாலை இறையடி எய்தினார்.

பந்துல ஜயசேகர, நியூஸ் பெஸ்ட் ல் ஒளிபரப்பாகும் ”பத்திகட” நிகழ்ச்சியை அண்மையில் தொகுத்து வழங்கியிருந்தது மட்டுமால்லாமல் டெலி நியூஸ் ஊடக நிறுவனத்தின் பிரதம ஆசிரியராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.

மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்த ஊடகவியலாளராகவும் போற்றப்படுகிறார்.

இதேவேளை,  பந்துல ஜயசேகர, கனடா, அமெரிக்கா, அவுஸ்;திரேலியா உள்ளிட் நாடுகளில் இராஜதந்திர அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார்.