Breaking News

மத்திய ஆக்லாந்தில் பேருந்து ஓட்டுநரை தாக்கிய நபர் கைது...!!

மத்திய ஆக்லாந்தில் பேருந்து ஓட்டுநரை தாக்கிய நபர் கைது...!!

திங்களன்று மத்திய ஆக்லாந்தில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் தாக்கப்பட்டதை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Ponsonby இல் மாலை 4.30 மணியளவில் ஒரு பேருந்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் டேவ் கிறிஸ்டோபர்சன் கூறுகையில், தாக்குதல் நடத்திய நபர் Ponsonby சாலையில் டேக் போடாமல் பஸ்ஸில் ஏறினார், 
"ஓட்டுனர் அந்த நபரை பேருந்தில் இருந்து இறங்கச் சொன்னார், பதிலுக்கு அவர் ஓட்டுநரை அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது, மேலும் பேருந்தை நிறுத்தியதும் அவர் பேருந்திலிருந்து இறங்கி Ponsonby சாலையில் ஓடினார். பின்னர் அவர் சிறிது தூரத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

அதிர்ஷ்டவசமாக, ஓட்டுநருக்கு கடுமையான காயங்கள் எதுவும் இல்லை.

ஆக்லாந்து போக்குவரத்து பொது போக்குவரத்து தொடர்பு குழு மேலாளர் ரேச்சல் காரா கூறுகையில், இந்த சம்பவத்தால் ஏஜென்சி வருத்தம் அடைந்துள்ளது. நாங்கள் காவல்துறை மற்றும் எங்கள் பேருந்து நடத்துனர்களுடன் இணைந்து விசாரணைகளுக்கு உதவுவதற்கும், ஓட்டுநர் அவர்களுக்குத் தேவையான ஆதரவைப் பெறுவதை உறுதி செய்வதற்கும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்" என்று காரா கூறினார்.

கைது செய்யப்பட்ட 39 வயதுடைய நபர் ஏப்ரல் 26ஆம் திகதி ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என கூறப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்