Breaking News

Ōtaraவில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் வாரண்ட் நடவடிக்கை காரணமாக பேருந்து சேவைகள் பாதிப்பு...!!

Ōtaraவில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் வாரண்ட் நடவடிக்கை காரணமாக பேருந்து சேவைகள் பாதிப்பு...!!

தெற்கு ஆக்லாந்தின் Ōtaraவில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் வாரண்ட் நடவடிக்கை காரணமாக இன்று காலை சில பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டன.

தேடுதல் வாரண்டிற்காக புறநகர் பகுதியில் உள்ள Hills சாலையில் ஒரு முகவரியில் பொலிஸார் இருந்தனர். இதனால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகள் தொடர்வதால் Hills வீதி முகவரியில் ஏராளமான பொலிஸார் உள்ளனர் என்று அவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

ஆனால் போலீஸ் நடவடிக்கையின் காரணமாக Hills வீதி, Hamill வீதியில் இருந்து Johnstones வீதி வரை இரு திசைகளிலும் மூடப்பட்டதாக ஆக்லாந்து டிரான்ஸ்போர்ட் (ஏடி) தெரிவித்துள்ளது.

இதனால் பேருந்து சேவைகள், குறிப்பாக பேருந்து வழித்தடம் 31 இல் சில இடையூறுகள் ஏற்படும் கூறப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தங்கள் பயணத் திட்டத்தைச் சரிபார்க்குமாறு ஆக்லாந்து டிரான்ஸ்போர்ட் பரிந்துரைத்துள்ளது.

செய்தி நிருபர் - புகழ்