Breaking News

காரை திருடிக்கொண்டு பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்ற நான்கு Bay of Plenty இளைஞர்கள் கைது...!!

காரை திருடிக்கொண்டு பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்ற நான்கு Bay of Plenty இளைஞர்கள் கைது...!!

காரை திருடிக்கொண்டு ஆக்லாந்து வழியாக பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படும் நான்கு Bay of Plenty இளைஞர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

Hillsborough அருகே மாநில நெடுஞ்சாலை 20 வழியாக திருடப்பட்ட காரை ஈகிள் ஹெலிகாப்டர் பார்த்தபோது, ​​அதிகாலை 4.15 மணியளவில் அந்தக் குழுவைப் பற்றி போலீஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

இந்த வாகனம் Rotorua முகவரியில் இருந்து திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து பொலிஸாரிடம் இருந்து தப்பிச்சென்ற குறித்த வாகனம் McLean St இல் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து மூவர் கைது செய்யப்பட்டதாகவும், ஒருவர் அங்கிருந்து தப்பிச்சென்றதாகவும் ஆக்லாந்து நகர மேற்குப் பகுதி கமாண்டர் இன்ஸ்பெக்டர் அலிஸ் ராபர்ட்சன் கூறினார். பின்னர் அவரும் சிறிது நேரம் கழித்து கைது செய்யப்பட்டதாக ராபர்ட்சன் கூறினார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 12 முதல் 15 வயதுக்குட்பட்ட நான்கு பேரும் இளைஞர் சேவைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

செய்தி நிருபர் - புகழ்