Breaking News

Porirua வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு திடீர் மின் தடை...!!

Porirua வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு திடீர் மின் தடை...!!

Porirua வில் ஏற்பட திடீர் மின் தடையால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

பெரும்பாலான Porirua வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இருப்பினும் 260 வீடுகளுக்கு இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை.

Porirua உள்ள 1100க்கும் மேற்பட்ட வீடுகளில் இன்று காலை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Papakowhai, Porirua City Centre, Paremata, Aotea, Porirua மற்றும் Pukerua Bay உள்ளிட்ட பகுதிகள் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று காலை Porirua வில் ஏற்பட்ட பாரிய காட்டுத் தீ விபத்துக்கும், இந்த மின் தடைக்கும் சம்பந்தமில்லை என வெலிங்டன் மின் வழங்கல் நிறுவனம் கூறியது.

மதியம் 12.30 மணிக்குள் மின்சாரம் சீராகும் என மதிப்பிடப்பட்டது.

செய்தி நிருபர் - புகழ்