Breaking News

திருமண பந்தத்தில் இணைந்த நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஆர்டெர்ன் - திராட்சை தோட்டத்தில் மிகவும் எளிமையாக நடந்த திருமணம்...!!

திருமண பந்தத்தில் இணைந்த நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஆர்டெர்ன் - திராட்சை தோட்டத்தில் மிகவும் எளிமையாக நடந்த திருமணம்...!!

நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் மற்றும் கிளார்க் கேஃபோர்ட் இருவரும் இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் 2019 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

இதையடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு 'நெவ்' என்ற 4 வயது மகள் இருக்கின்றார்.

இந்நிலையில் 2022 ஆம் ஜனவரியில் ஜசிந்தா ஆர்டெர்ன் மற்றும் கிளார்க் கேஃபோர்ட் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் கொவிட்-19 ஓமிக்ரான் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் 43, மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரான பியூ கிளார்க் கேஃபோர்ட், 47 இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்த திருமண விழா Hawke's Bay இல் உள்ள ஒரு திராட்சைத் தோட்டத்தில் மிகவும் எளிமையாக அழகாக நடைபெற்றுள்ளது.

                          

முன்னாள் பிரதம மந்திரி கிறிஸ் ஹிப்கின்ஸ், பங்குதாரர் டோனி கிரேஸ் மற்றும் நண்பரும் முன்னாள் துணைப் பிரதமருமான கிராண்ட் ராபர்ட்சன் உட்பட பல விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் ஆடை வடிவமைப்பாளர் ஜூலியட் ஹோகன், சமையல்காரர் பீட்டர் கார்டன், தொழிலாளர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் கெல்வின் டேவிஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான நியூசிலாந்தின் உயர் ஆணையர் அனெட் கிங் ஆகியோரும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த தகவல் முதலில் Stuff இணையதளத்தில் வெளியானது