ஆக்லாந்தில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த பெண்ணை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
Wesley என்ற இடத்தில் உள்ள Stoddard சாலையில் அமைந்துள்ள குறித்த உணவகத்தில் நேற்றைய தினம் இரவு இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலுக்குப் பின்னர் இரவு 8 மணியளவில் 45 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த மாதம் அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்தி நிருபர் - புகழ்