Breaking News

கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பியோட்டம்

கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பியோட்டம்

 

வெலிசர வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

 

இவர் , கொழும்பு-14 கிரேன்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

 

அதற்கமைய தப்பியோடிய நோயாளியை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

மேற்படி தொற்றாளர் மருதானையில் வசிப்பதாக வைத்தியசாலைக்கு முகவரி வழங்கியுள்ளார். அந்த முகவரி போலியானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.