Breaking News

Muriwai கடற்கரையில் வாகனம் கவிழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் - இளைஞன் ஒருவர் கைது...!!

Muriwai கடற்கரையில் வாகனம் கவிழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் - இளைஞன் ஒருவர் கைது...!!

கடந்த மாதம் ஆக்லாந்தின் Muriwai கடற்கரையில் வாகனம் உருண்டு விபத்துக்குள்ளானதில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 20 வயது இளைஞன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேடிசன் மேரி சேம்பர்லைன் என்ற 19 வயது இளம்‌ பெண், கடந்த மாதம் 21 ஆம் திகதி அன்று நடந்த விபத்தில் உயிரிழந்தார்.

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியமையே விபத்து ஏற்பட காரணம் என கண்டறியப்பட்டதை அடுத்து வாகனத்தை செலுத்திய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார் என துப்பறியும் மூத்த சார்ஜென்ட் ஜேசன் மெக்கின்டோஷ் தெரிவித்தார்.

மாடிசனின் மரணம் அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், தற்போது எங்களால் மேலதிக கருத்து தெரிவிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

அந்த நபர் பெப்ரவரி 23 ஆம் திகதி Waitākere மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி நிருபர் - புகழ்