Breaking News

அமெரிக்க ஆராய்ச்சி கப்பலுக்கு இலங்கை தடை...!!

அமெரிக்க ஆராய்ச்சி கப்பலுக்கு இலங்கை தடை...!!

இலங்கை

அமெரிக்க ஆராய்ச்சி கப்பல் ஒன்று இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல், இலங்கைக் கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி மறுத்துள்ளது.

வெளிநாட்டு கப்பல்கள் இலங்கையில் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கும் நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இவ்வாறு அனுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும் கப்பலுக்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக மட்டும் குறித்த கப்பல் இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே சீன கப்பல் ஒன்றிற்கு ஆய்வு நடவடிக்ககைகளில் ஈடுபடுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.