Breaking News

தெற்கு ஆக்லாந்தில் புத்தாண்டு தினத்தன்று துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் - இருவர் கைது...!!

தெற்கு ஆக்லாந்தில் புத்தாண்டு தினத்தன்று துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் - இருவர் கைது...!!

புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில் தெற்கு ஆக்லாந்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனவரி முதலாம் திகதி அதிகாலை 3.20 மணியளவில் Manurewa வில் உள்ள, Addington Ave இல் வாகனத்தில் இருந்த 19 மற்றும் ‌17 வயதுடைய இரண்டு இளைஞர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் மீட்கப்பட்டனர்.

இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் 19 வயது இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் ‌19 மற்றும் 18 வயதுடைய இரண்டு இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டதாக Counties Manukau CIB ஐ சேர்ந்த துப்பறியும் மூத்த சார்ஜென்ட் ராப் ஹன்கின் தெரிவித்தார்.

மேலும் இவர்கள் இருவரும் இன்று Manukau மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

விசாரணைகள் தொடர்வதாகவும் மேலும் பல கைதுகள் இடம்பெறலாம் எனவும் துப்பறியும் மூத்த சார்ஜென்ட் ஹன்கின் கூறினார்.

மேலும் விசாரணைக்கு உதவக்கூடிய தகவல் உள்ளவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

செய்தி நிருபர் - புகழ்