Breaking News

முன்னாள் நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் Ghahraman வீட்டில் விசாரணை - திருட்டு குற்றச்சாட்டை பதிவு செய்த பொலிஸார்...!!

முன்னாள் நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் Ghahraman வீட்டில் விசாரணை - திருட்டு குற்றச்சாட்டை பதிவு செய்த பொலிஸார்...!!

பசுமை கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோல்ரிஸ் கஹ்ராமன்  இரண்டு கடைகளில் திருடியதாக காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட பொலிஸ் அறிக்கையின்படி, அவர் பெப்ரவரி 1 ஆம் திகதி ஆக்லாந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ghahraman ஐ விசாரிக்க பொலிஸார் இன்று அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் கஹ்ராமன் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார், வேலை தொடர்பான அழுத்தங்களால் தனது மன ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அவர் குணமடைவதில் கவனம் செலுத்த விரும்புவதாகவும் கூறினார்.

மேலும் அவர் தனது செயல்களுக்கு முழுப்பொறுப்பேற்பதாகவும் கூறினார்.

இதனையடுத்து பொலிஸார் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று பிற்பகல், பொலிஸ் செய்தித் தொடர்பாளர், தற்போதைய விசாரணையின் ஒரு பகுதியாக ஆக்லாந்தில் உள்ள Golriz Ghahraman இன் வீட்டிற்கு அதிகாரிகள் சென்றதை உறுதிப்படுத்தினார்.

ஆனால் இது தொடர்பாக அவர் மேலதிக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

செய்தி நிருபர் - புகழ்