Ashburton இல் உள்ள ஒரு தெருவில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து Ashburton மையத்தில் பல தெருக்கள் உடனடியாக மூடப்பட்டன.
இன்று பிற்பகல் 3.20 மணியளவில் Ashburton இன் Tancred தெருவின் நடைபாதையில் குறித்த பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து East வீதிக்கும் William வீதிக்கும் இடையில் சுற்றிவளைப்புக்கள் அமைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
Burnett மற்றும் Moore தெருக்களுக்கு இடையே உள்ள Cass தெருவும் மூடப்பட்டது.
இதனையடுத்து வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.
சம்பவ இடத்தில் உள்ள பொதுமக்கள் அவசர சேவைகளின் வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
மேலும் குறித்த பொதியால் ஆபத்து எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து மூடப்பட்ட சாலைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்தி நிருபர் - புகழ்