Breaking News

Taupō மற்றும் Matamata இல் இடம்பெற்ற மோசமான கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் ஐவர் கைது..!! 

Taupō மற்றும் Matamata இல் இடம்பெற்ற மோசமான கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் ஐவர் கைது..!! 

Taupō மற்றும் Matamata இல் இடம்பெற்ற மோசமான கொள்ளைகள் பற்றிய விசாரணைகளை தொடர்ந்து ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் Taupō இல் உள்ள Johnbrook Crescent இல், ஈஸ்டர் வார இறுதியில் ஒரு பெட்ரோல் நிலையத்தில் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஏப்ரல் 1 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் ஒரு குழு ஆயுதங்களுடன் கடைக்குள் நுழைந்ததாகவும், கடையில் இருந்து சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் எடுக்கப்பட்டதாகவும் டிடெக்டிவ் மூத்த சார்ஜென்ட் ரியான் யார்ட்லி கூறினார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 14 மற்றும் 15 வயதுடைய இருவர் இன்று Taupō மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

மேலும் ஏப்ரல் 11 வியாழன் அன்று 15 வயது இளைஞனும் 17 வயது இளைஞனும் Taupō இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இதனிடையே Matamata வில் உள்ள Tower Road இல் ஒரு வணிக வளாகத்தில் இரண்டு வெவ்வேறு திகதிகளில் இடம்பெற்ற மோசமான கொள்ளைச் சம்பவங்களுக்குப் பிறகு 19 வயது இளைஞரைக் கைது செய்ததாக Waikato பொலிசார் தெரிவித்தனர்.

மார்ச் 26 செவ்வாய்க்கிழமை மற்றும் ஏப்ரல் 4 வியாழன் அன்று, அந்த நபர் கத்தியைக் காட்டி ஊழியர்களை மிரட்டினார், மேலும் புகையிலை, சிகரெட் மற்றும் பணத்தை திருடிக்கொண்டு தப்பிச்சென்றதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட  இளைஞன் இன்று ஹமில்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் ஏப்ரல் 22ஆம் திகதி மீண்டும் ஆஜராக உள்ள நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

செய்தி நிருபர் - புகழ்