Breaking News

கிழக்கு ஆக்லாந்தில் ரக்பி விளையாட்டின் போது மூளைக் காயமடைந்த வீரர் உயிரிழப்பு...!!

கிழக்கு ஆக்லாந்தில் ரக்பி விளையாட்டின் போது மூளைக் காயமடைந்த வீரர் உயிரிழப்பு...!!

கிழக்கு ஆக்லாந்தில் சனிக்கிழமை நடைபெற்ற ரக்பி விளையாட்டின் போது மூளைக் காயமடைந்த ரக்பி வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த வீரர் மூன்று பிள்ளைகளின் தந்தை என கூறப்படுகிறது. சனிக்கிழமை பிற்பகல் Beachlands இல் நடந்த விளையாட்டில் காயமடைந்த 30 வயதான கோரி ஹீதர், ஆக்லாந்து சிட்டி மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில் நேற்று மாலை அவர் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் ஆன்லைன் நிதி திரட்டும் பக்கத்தில் தெரிவித்தனர்.

இந்நிலையில் Beachlands Maraetai ரக்பி கிளப் தலைவர் ஜேம்ஸ் கெம்மல், ஹீதர் அவர்களின் மூத்த வீரர்களில் ஒருவர் என்று New Zealand Herald இடம் கூறினார்.

அவர் கிளப் மற்றும் பரந்த சமூகத்தில் மிகவும் விரும்பப்படும் உறுப்பினராக இருந்தார் என்று ஜெம்மல் கூறினார்.

ஹீதரின் மறைவால் கிளப் மனம் உடைந்தது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அணியினர் அனைவருக்கும் எங்கள் அன்பும் ஆதரவும் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்