Breaking News

Whangārei இல் இரண்டு வனத்துறை ஊழியர்கள் பயணித்த வாகனத்தை தாக்கிய நபர் கைது...!!

Whangārei இல் இரண்டு வனத்துறை ஊழியர்கள் பயணித்த வாகனத்தை தாக்கிய நபர் கைது...!!

கடந்த திங்கட்கிழமை Whangārei இல் இரண்டு வனத்துறை ஊழியர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை தாக்கியதாக கூறப்படும் 47 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

துப்பறியும் மூத்த சார்ஜென்ட் ஜான் கிளேட்டன் கூறுகையில், திங்கள்கிழமை அதிகாலையில் இரண்டு வனத்துறை ஊழியர்களின் வாகனத்தை மற்றொரு வாகனம் பின்தொடர்ந்து வந்தது.

பின்னர் அந்த வாகனத்தில் இருந்த நபர் Mangakahia சாலையில் வனத்துறை ஊழியர்களின் வாகனத்தை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் Whangārei பகுதியில் சம்பவத்தில் ஈடுபட்ட திருட்டு வாகனத்தை கண்டுபிடித்தனர் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் ஒரு நபரும் அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

அந்த நபர் நேற்றைய தினம் Whangārei மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளேட்டன் கூறுகையில்,  தொழிலில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஊழியர்கள் இருவருக்கும் இது ஒரு பயமுறுத்தும் சம்பவம், எங்கள் விசாரணையில் முன்னேற்றம் அடைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வேறு நபர்களையோ, வாகனங்களையோ பொலிஸார் தேடவில்லை.

செய்தி நிருபர் - புகழ்