Breaking News

இங்கிலாந்தை துவம்சம் செய்து இந்திய அணி வெற்றி

இங்கிலாந்தை துவம்சம் செய்து இந்திய அணி வெற்றி

இந்தியா-இங்கிலாந்து மோதும் 4-வது 20 ஓவர் போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதன்படி நிர்ணயித்த 20 ஓவரில் இந்திய அணி 8 விக்கெட் இழந்து 185 ரன்கள் எடுத்தது. அதிகப்படியாக சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

5 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளனர்.