Breaking News

இலங்கையின் சிறந்த பேட்மிண்டன் வீரர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு...!!

இலங்கையின் சிறந்த பேட்மிண்டன் வீரர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு...!!

இலங்கை

இலங்கையின் சிறந்த பேட்மிண்டன் வீரரான நிலுக கருணாரத்ன விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நிலுகா கருணாரத்ன மூன்று தடவைகள் ஒலிம்பிக்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இவர் பல சர்வதேச போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பல பதக்கங்களை வென்றுள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) தலைமையகத்தில் நடைபெற்ற அமர்வில் நிலுக கருணாரத்ன தனது ஓய்வை அறிவித்துள்ளார்.