பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று வெலிங்டன் நெடுஞ்சாலையில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை Melling ரயில் நிலையத்தில் மாநில நெடுஞ்சாலை 2 இன் தெற்குப் பாதையை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.
இந்த போராட்டத்தின் விளைவாக ஆறு பேர் கைது செய்யப்பட்டதை பொலிஸார் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தினர்.
அவர்கள் மீது அத்துமீறல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சம்பவ இடத்தில் பெருமளவான பொலிஸ் பிரசன்னம் இருந்ததுடன், சுமார் 10 நிமிடங்களுக்குள் பொலிஸார் அவர்களை வீதியில் இருந்து அப்புறப்படுத்தினர்.
Hutt Valley பகுதி கமாண்டர் டியான் பென்னட் கூறுகையில்..
"போராட்டக்காரர்களின் இந்த நடவடிக்கைகள் பொறுப்பற்றவை"
"இது ஒரு பாதுகாப்பான செயல் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏன் நினைத்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, மேலும் இது சமூகத்தின் உறுப்பினர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்," என்று பென்னட் கூறினார்.
"அதிர்ஷ்டவசமாக நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தோம், மேலும் நிலைமையை விரைவாகவும் பாதுகாப்பாகவும் தீர்க்க முடிந்தது மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்தது என அவர் தெரிவித்தார்.