Breaking News

111 இற்கு போலி அழைப்பை ஏற்படுத்திய ஆக்லாந்து பெண் கைது...!!

111 இற்கு போலி அழைப்பை ஏற்படுத்திய ஆக்லாந்து பெண் கைது...!!

பொய்யான துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து புகாரளிக்க காவல்துறைக்கு அழைப்பை ஏற்படுத்திய ஆக்லாந்து பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஒரு அறிக்கையில், நேற்று இரவு 9.30 மணிக்கு முன்னதாக தங்களுக்கு அழைப்பு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தனர், ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

தவறான நோக்கங்களுக்காக தொலைபேசியைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 29 வயதான குறித்த பெண் Papakura மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்...!!