Breaking News

13 கிலோகிராம் போதைப்பொருளை கடத்த முயன்ற ஆக்லாந்து நபருக்கு 10 ஆண்டுகள் சிறை...!!!

13 கிலோகிராம் போதைப்பொருளை கடத்த முயன்ற ஆக்லாந்து நபருக்கு 10 ஆண்டுகள் சிறை...!!!

13 கிலோகிராம் மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருளை கடத்த முயன்ற குற்றத்திற்காக ஆக்லாந்தில் உள்ள நபருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Eleazar Tahuriorangi என்ற குறித்த நபர் இன்று மனுகாவ் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி, மெத்தாம்பேட்டமைனை இறக்குமதி செய்தல், ஏற்றுமதி செய்தல், போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் விநியோகித்தல் ஆகிய குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டார்.

தேசிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு (NOCG) தலைமையிலான விசாரணையில், 33 வயதான இந்த நபர், ஹைட்ராலிக் ஜாக்கில் 13 கிலோவுக்கும் அதிகமான கிளாஸ்-ஏ மருந்தை கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

துப்பறியும் இன்ஸ்பெக்டர் பால் நியூமன் கூறுகையில், 
இந்த போதைப்பொருளின் தெரு மதிப்பு 4.5 மில்லியன் டொலர்களுக்கு அதிகமாக இருந்திருக்கலாம் என தெரிவித்தார்.