ஆக்லாந்தில் உள்ள கடைகளில் மூன்று கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றமை குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Flat Bush இல் உள்ள ஒரு கடையில் கொள்ளையர்கள் கண்ணாடி முகப்பை உடைத்து பொருட்களை திருடியதாக கூறப்படுகிறது.
இச் சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றதை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.
இதனையடுத்து அதிகாலை 3.45 மணியளவில் Titirangi சாலையில் உள்ள ஒரு மதுக்கடையில் திருடர்கள் புகுந்தனர்.
இச் சம்பவத்தில் மதுக்கடையின்
முன்பக்க ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பதை பொலிஸார் கண்டறிந்தனர்.
அப்போது சாலையின் குறுக்கே இருந்த மற்றொரு மதுபானக் கடையும் கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.