Palmerston North விமான நிலையத்தில் இன்று மதியம் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் சந்தேகத்திற்கிடமான பைகள் இருந்ததால் விமான நிலையம் மூடப்பட்டது.
இச் சம்பவத்திற்கு மதியம் 1.30 மணியளவில் பொலிசார் அழைக்கப்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையம் மூடப்பட்டது.
சோதனைகளை மேற்கொண்ட பொலிஸார் இந்த விவகாரம் தீர்க்கப்பட்டதாக தெரிவித்ததை அடுத்து சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது
இதன்போது புறப்பட இருந்த இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் வரவிருந்த மற்ற இரண்டு விமானங்கள் வெலிங்டனுக்கு திருப்பி விடப்பட்டன.