Breaking News

மன்னித்துவிடு மகனே!

மன்னித்துவிடு மகனே!

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரியூட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல்​வேறு வழிகளிலும் எதிர்ப்புக் குரல்கள் கொடுக்கப்படுகின்றன.

கபனின் ஒரு பகுதியான வெள்ளைத் துணியூடாக மண்ணறையை மறுப்பவர்களுக்கு அறிவூட்டும் அமைதியான அடையாள எதிர்ப்புப் போராட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.


இந்நிலையில், 20 நாட்களேயான சிசுவும், எரியூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.சிசுவின் புகைப்படத்துடன் மன்னித்துவிடு மகனே! என எழுதப்பட்டு பதைகையின் அருகில் நின்று, எதிர்ப்புத் தெரிவிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.