Breaking News

கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவும் அபாயம்

கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவும் அபாயம்

மேல் மாகாணத்தில் கொரோனா தொற்றளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் பொதுமக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.

மேல் மாகாணத்தில் வாழும் மக்கள் நடமாடுவது தொடர்பாக சுய ஒழுக்கம் கொண்டிருக்க வேண்டும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு செயற்படாவிட்டால் கொரோனாதொற்று நாடு முழுவதும் பரவக்கூடும் என்று அரச வைத்திய அதி காரிகள் சங்க (GMOA) செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்ஜே தெரிவித்துள்ளார்.