Breaking News

Pukaki ஏரி அருகே இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கிய நான்காவது நபர் பலி...!!

Pukaki ஏரி அருகே இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கிய நான்காவது நபர் பலி...!!

Hayman வீதிக்கும் Tekapo Canal வீதிக்கும் இடையில் சனிக்கிழமை இரண்டு வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதுண்டு  விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர், அவர்களில் இருவர் மலேசியாவை சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள்.

மேலும் மூவர் ஆபத்தான நிலையில் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சம்பவ இடத்தில் இறந்தவர்களை முறையாக அடையாளம் காணும் பணி இடம்பெற்று வருவதாகவும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் பொலிஸைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செய்தி நிருபர் - புகழ்