Breaking News

ஆக்லாந்து விமான நிலையத்தில் மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் - இருவர் கைது..!!

ஆக்லாந்து விமான நிலையத்தில் மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் - இருவர் கைது..!!

ஆக்லாந்து விமான நிலையத்தில் இரண்டு பைகளில் 63 கிலோவுக்கும் அதிகமான மெத்தம்பேட்டமைன் மற்றும் எக்ஸ்டஸி போதைப்பொருளை சுங்கத்துறையினர் மீட்டதை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மார்ச் 13 அன்று 21 வயதான பெண்ணின் பொருட்களை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர், இதன்போது 13 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள 37.15 கிலோ மெத்தாம்பேட்டமைனைக் கண்டுபிடித்தனர்.

அதே நாளில், 28 வயது இளைஞனின் சூட்கேஸில் 7.7 மில்லியன் டொலர் மதிப்புள்ள 25.71 கிலோ எக்ஸ்டசி என அழைக்கப்படும் MDMA போதைப்பொருளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட Manukau மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர், மேலும் அவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

செய்தி நிருபர் - புகழ்