Breaking News

ஆக்லாந்தில் ரயில் மோதுண்டு ஒருவர் பலி...!!

ஆக்லாந்தில் ரயில் மோதுண்டு ஒருவர் பலி...!!

ஆக்லாந்தின் புறநகர்ப் பகுதியான Meadowbank இல் ஒருவர் ரயில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 8.40 மணியளவில் Manapau தெருவுக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன.

மேலும் அப்பகுதியில் ரயில்கள் நிறுத்தப்பட்டதுடன், அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு பயணிகளை பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

செய்தி நிருபர் - புகழ்