Breaking News

தெற்கு ஆக்லாந்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் இருவர் படுகாயம்...!!

தெற்கு ஆக்லாந்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் இருவர் படுகாயம்...!!

தெற்கு ஆக்லாந்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று நண்பகலுக்கு முன்னதாக, Papakura வில் உள்ள Great South வீதி மற்றும் Nelson தெரு சந்திப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த கத்திக்குத்து தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஆபத்தான  நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும் இரண்டாவது நபருக்கு மிதமான காயம் ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடந்து வருகின்றன, மேலும் இரு தரப்பினரிடமும் பொலிஸார் பேசி வருகின்றனர் என்று காவல்துறையை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வேறு யாரையும் தேடவில்லை என்றும், அப்பகுதியில் பலத்த பொலீஸ் பாதுகாப்பு இருக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்