Breaking News

Westland ஐ புரட்டிப் போடும் கனமழை - மக்களை விரைவாக ‌வெளியேற்ற முயற்சி...!!

Westland ஐ புரட்டிப் போடும் கனமழை - மக்களை விரைவாக ‌வெளியேற்ற முயற்சி...!!

Westland ஐ இன்று இரவு கனமழை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னெச்சரிக்கையாக இருட்டுவதற்குள் வீடுகளை காலி செய்து மக்களை வெளியேற்ற அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் கனமழை சிவப்பு எச்சரிக்கை உள்ளது, சனிக்கிழமை காலை வரை, 500 முதல் 700 மிமீ வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கடற்கரையில் 100 முதல் 200 மிமீ வரை மழை பெய்யும்.

Westland மேயர் ஹெலன் லாஷ் கூறுகையில், ஏற்கனவே பெய்த மழைக்கு மேல் இன்னும் 300 மிமீ மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று இரவு 10 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை கனமழை எதிர்பார்க்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்