Northland இல் உள்ள Ruakākā கடற்கரையில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 11.20 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து அவசர சேவைகள் மற்றும் பொலிஸார் கடற்கரைக்கு விரைந்து வந்தனர்.
தண்ணீரில் இருந்து மீட்கப்பட்ட குறித்த நபருக்கு CPR வழங்கப்பட்டது.
இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த மரணம் தொடர்பில் மரண விசாரணை அதிகாரிக்கு பரிந்துரைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
செய்தி நிருபர் - புகழ்