Breaking News

தெற்கு ஆக்லாந்தில் கொள்ளையில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் கைது..!!

தெற்கு ஆக்லாந்தில் கொள்ளையில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் கைது..!!

தெற்கு ஆக்லாந்தைச் சுற்றியுள்ள வேப் கடைகளில் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதுடன், திருடப்பட்ட காரில் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்ற மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு, Māngere இல் உள்ள Coronation சாலையில் ஒரு வேப் கடையில் ஒரு குழு ஜன்னலை உடைத்ததாகக் மூத்த சார்ஜென்ட் ஸ்டீவ் ஆல்பிரே கூறினார்.

பின்னர் அங்கிருந்து பொருட்களை திருடிக்கொண்டு அந்தக் கும்பல் திருடப்பட்ட காரில் தப்பிச் சென்றது.

அன்றையதினம் அதிகாலை 2.30 மணிக்குப் பிறகு, குறித்த குழு Papatoetoe வில் உள்ள Great South வீதியில் ஒரு வேப் கடையின் ஜன்னலை உடைத்து பொருட்களை திருடினர்.

பின்னர் அங்கிருந்து திருடிய காரில் மீண்டும் தப்பிச் சென்றனர். இதனையடுத்து குறித்த வாகனத்தை பின் தொடர்ந்த பொலிஸார் 15 வயதுடைய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களில் இருவர் மீது பல திருட்டு மற்றும் வாகனம் ஓட்டுதல் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன, மேலும் இம்மாதம் அவர்கள் இருவரும் இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

மூன்றாவது வாலிபர், இளைஞர் உதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

செய்தி நிருபர் - புகழ்