Breaking News

கிறைஸ்ட்சர்ச்சில் மீண்டும் ஒரு கத்திக்குத்து சம்பவம் - பெண் ஒருவர் காயம்...!!

கிறைஸ்ட்சர்ச்சில் மீண்டும் ஒரு கத்திக்குத்து சம்பவம் - பெண் ஒருவர் காயம்...!!

இன்று கிறைஸ்ட்சர்ச்சில் மீண்டும் ஒரு கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மதியம் 12.15 மணியளவில் Aranui புறநகரில் உள்ள Breezes சாலையில் உள்ள ஒரு வீட்டில் ஒரு பெண் கத்தியால் குத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அந்த பெண்ணின் காயங்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு கிறைஸ்ட்சர்ச்சில் Bexley பூங்காவில் நாயுடன் நடந்து சென்ற போது கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் 18 வயது ஆண் மற்றும் 23 வயது பெண் இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.