Breaking News

ஆக்லாந்து நகைக்கடையில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் 17 வயது இளைஞர் கைது...!!!

ஆக்லாந்து நகைக்கடையில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் 17 வயது இளைஞர் கைது...!!!

ஆக்லாந்தின் North Shore இல் உள்ள நகைக்கடைகளில் இடம்பெற்ற ஏராளமான திருட்டு சம்பவங்களைத் தொடர்ந்து 17 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 20 ஆம் திகதி Takapuna வில் உள்ள ஐந்தாவது அவென்யூ ஜூவல்லர்ஸில் இடம்பெற்ற கொள்ளை, ஜூன் 16 ஆம் திகதி  Michael Hill Takapuna வில் இடம்பெற்ற மோசமான கொள்ளை மற்றும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி சூப்பர் லிகர் சன்னிப்ரேயில் இடம்பெற்ற கொள்ளை ஆகியவை இவர் செய்த திருட்டுக்களில் அடங்கும்.

இந்நிலையில் Henderson இல் ஒரு வீட்டை சோதனை செய்ததில் திருடப்பட்டதாகக் கூறப்பட்ட "கணிசமான" நகைகள்  கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சோதனையில் மதுபானம், புகையிலை, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் போன்ற திருடப்பட்ட பொருட்களும் பொதி செய்யப்பட்ட கஞ்சாவும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த நபர் இன்று North Shore இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.