Breaking News

இன்று மீண்டும் திறக்கப்படவுள்ள பாடசாலைகள்..!

இன்று மீண்டும் திறக்கப்படவுள்ள பாடசாலைகள்..!

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக, மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் இன்றைய தினம் முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

மேலும், குறித்த மாணவர்களின் விடுபட்ட பாடத்திட்டங்களை உடனடியாக முன்னெடுப்பதற்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மேல் மாகாணத்தில் 900 இற்கும் அதிகமான பாடசாலைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திறக்கமுடியும் என தாம் எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.