Breaking News

மக்கள் செல்வாக்கைப் பெற்ற ஹமீது ஹுஸைன் மரைக்கார் - புத்தளத்தின் ஓர் வரலாற்று பதிவு...!!

மக்கள் செல்வாக்கைப் பெற்ற ஹமீது ஹுஸைன் மரைக்கார் - புத்தளத்தின் ஓர் வரலாற்று பதிவு...!!

புத்தளத்தில் புகழ்பெற்ற முதலாளி குடும்பத்தை சேர்ந்த சி.அ.க. ஹமீது ஹுஸைன் மரைக்கார்.

'சீனானாகானா' என அழைக்கப்பட்ட இவர் புத்தளம் மக்களின் கெளரவத்தைப் பெற்றவர்.

காதியாரான இவர், தேசாதிபதி சேர் வில்லியம் மனிங் அவர்களால் 1923 இல், புத்தளத்தின் இரண்டாவது சோனகர் தலைவராக நியமிக்கப்பட்டு சிறிது காலத்தின் பின்னர் Head Moor Man ஆனார். 

மன்னார் வீதியில் அமைந்துள்ள தாய், சேய் சுகாதார மருத்துவமனை அவர் அன்பளிப்பாக வழங்கியது. தற்போதைய ஸாஹிறா ஆரம்பப் பாடசாலைக் காணியின் ஒரு பகுதியும் இவரின் நன்கொடையே. 1938 இல் கட்டிமுடிக்கப்பட்ட புத்தளம் பெரியபள்ளிவாசலை சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்தவரும் அன்றைய Head Moor man ஹமீது ஹுஸைன் மரைக்கார் அவர்களே.

புத்தளம் ஸாஹிறாக் கல்லூரியின் உருவாக்கத்திலும் அவரின் பங்கு அளப்பரியது. அன்று அவர் வழங்கிய ரூபா 1,500/- பணத் தொகையுடனேயே  ஸாஹிறாக் கல்லூரியைத் தொடங்குவதற்கான நிதி சேகரிப்பு ஆரம்பமானது.

 *சாரா உம்மா (அலி மரைக்கார் அவர்களின் மனைவி)* 

ஹமீத் ஹுசைன் மரைக்கார் அவர்களின் புதல்விகளில் ஒருவரான சாரா உம்மா அவர்களின் பெயரிலேயே அவரது கணவரான அலி மரிக்கார் அவர்களாளல் புத்தளம் ஸாஹிரா கல்லூரியில் விஞ்சான ஆய்வுக்கூடம் மற்றும் சாரா நெசவு சாலை ஆகியன நிறுவப்பட்டுள்ளன.

தற்போது அவருடைய கொள்ளுப்பேரன் ஐனாஸ் அலி Head Moor Man ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.