Breaking News

ஒரு நாளைக்காவது பத்திக் அணியுங்கள்.....

ஒரு நாளைக்காவது பத்திக் அணியுங்கள்.....

அடுத்த வருடத்திலிருந்து அரச பணியாளர்கள் ஒரு நாளைக்காவது பத்திக் ஆடையை அணிந்து, கடமைகளுக்கு சமூகமளிக்குமாறு, பத்திக் கைத்தொழில் மற்றும் தேசிய ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அரச பணியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கமைய தேசிய ஆடை உற்பத்தியைப் பாதுகாத்தல், தேசிய ஆடைத்துறையில் புதிய தொழில்வாய்ப்பு தலைமுறை மற்றும் ஆடைகளுக்காக வருடாந்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் உள்ளுர் பரிமாற்றத்தை தடுக்கும் நோக்கில் இந்தக் கோரிக்கையை விடுப்பதாக அமைச்சர் தயாசிறி தெரிவித்துள்ளார்.

மேலும் அதற்கமைய, அரச பணிகளில் ஈடுபட்டுள்ள 3 மில்லியனுக்கும் அதிகமானவர்களின் ஒத்துழைப்பை இதற்காக வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.