Breaking News

கதிர்ச்செல்வனை கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்த இ.தொ.கா தீர்மானம்

கதிர்ச்செல்வனை கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்த இ.தொ.கா தீர்மானம்

அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளர் கதிர்ச்செல்வனை கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இதன்படி ,தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்டதாலேயே அவருக்கு எதிராக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர், தற்போது ஹம்பாந்தோட்டையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.

இந்நிலையில் அவர் குணமடைந்து வந்ததும் அவரிடம் விளக்கம் கோரப்பட்டு, ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் காங்கிரஸின் பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

அதற்கமைய பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அதன் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே, அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளர் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறும் வகையில் பொதுநிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் இந்நிகழ்வுகளில் பங்கேற்ற அரசியல் பிரமுகர்கள் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.