Breaking News

உதய கம்மன்பில விடயத்தில் தமிழ் கூட்டமைப்பு அவசர தீர்மானம் எடுக்காது

உதய கம்மன்பில விடயத்தில் தமிழ் கூட்டமைப்பு அவசர தீர்மானம் எடுக்காது

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அவநம்பிக்கைப் பிரேரணை தொடர்பாக உடனடியாக தீர்மானம் எடுக்கப்படாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

உதய கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை இந்த மாதம் 19 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 20 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இந்த அவநம்பிக்கைப் பிரேரணை மீதான விவாதத்தைக் கருத்திற்கொண்டு, வாக்கெடுப்பு நடத்தப்படும் தினத்திலேயே இதுகுறித்த தீர்மானம் எடுக்கப்படும் என்றும் சுமந்திரன் கூறினார்.