Breaking News

விலகினார் ஸ்ரீதரன்

விலகினார் ஸ்ரீதரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் கொறடா பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் விலகியுள்ளார்.

இதுத் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், தான் கடந்த 5 வருடமாக குறித்த பதவியில் இருந்துள்ளதாகவும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் கருத்தாடல்கள் ஆரோக்கியமாக இல்லாமையாலும் அவர்கள் ஊடகங்களில் கொறடா  என்கின்ற பதவியினை வைத்து ஸ்ரீதரன்  பணம் சம்பாதிப்பது போல் ஒரு மாயயை உருவாக்கி வருகிறார்களெனவும் தெரிவித்தார்.

மேலும்,  அவ்வாறானதொரு பதவி எனக்கு தேவை இல்லை என்று அந்தப் பதவியிலிருந்து வெளியேறியதாகவும், இந்த விடயம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.