Breaking News

கொவிட் -19 சிகிச்சை பெறும் அரச ஊழியருக்கு காப்புறுதி மூலம் பணம்

கொவிட் -19 சிகிச்சை பெறும் அரச ஊழியருக்கு காப்புறுதி மூலம் பணம்

 

கொரோனா அச்சம் காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் அரச ஊழியர்களுக்கு பணம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி அக்ரஹார காப்புறுதியில் இவர்களுக்கு நாளொன்றுக்கு 3ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் 10 நாட்களுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

 

அதேபோல் கொவிட்-19 தொற்றால் உயிரிழக்கும் அரச ஊழியருக்கு 7 லட்சம் ரூபா பணம் வழங்கத் தீர்மானிக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.