Breaking News

மாணவர்களே போக்குவரத்து நெரிசலுக்கு காரணம்?

மாணவர்களே போக்குவரத்து நெரிசலுக்கு காரணம்?

 

பாடசாலைகளுக்கு அருகில் மாணவர்கள் வீதியை கடப்பதால், கொழும்பு உள்ளிட்ட சில நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

 

மேலும் ,சகல பிரதான நகரங்களிலும் உள்நுழையும் பிரதான பாதைகளின் இருமருங்கிலும் பாடசாலைகள் காணப்படுவதாகவும் இதனால் வாகன நெரிசல் ஏற்படுவதாகத் தெரிவித்த அவர், சுரங்க வழி அல்லது சிறிய மேம்பாலங்களை அமைத்து இதன் மூலம் மாணவர்கள் வீதிகளை கடக்க நடவடிக்கை எடுப்பதன் ஊடாக வாகன நெரிசலை குறைக்க முடியும் என்றார்.