Breaking News

இலங்கைக்குள் நுழையும் அமெரிக்க மரைன் இராணுவப் படை...!!

இலங்கைக்குள் நுழையும் அமெரிக்க மரைன் இராணுவப் படை...!!

இலங்கை

இலங்கையின் திருகோணமலை துறைமுகத்தில் அமெரிக்க(US) கடற்படை மற்றும் யு.எஸ். மரைன் கார்ப்ஸ்(USMC) மற்றும் இலங்கை கடற்படை ஆகியவை இணைந்து கூட்டு கடற்படை பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடவுள்ளன.

குறித்த பயிற்சி நடவடிக்கைகள் தொடர்பில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

இந்த பயிற்சிகளின் போது இலங்கை கடற்படையின் CARAT Sri Lanka படைப்பிரிவானது கடற்படைச் சொத்துக்களுக்கான பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்புத் துறையில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்க கடற்படைப் படைப் பிரிவான அமெரிக்க கடற்படை பயங்கரவாத எதிர்ப்புப் பாதுகாப்புக் குழுவின் (FAST) நிபுணத்துவத்தைக் கொண்டிருக்கும்.

CARAT Sri Lanka பயிற்சியானது, அமைதிப் பேச்சுவார்த்தைகள், மோதல் மேலாண்மை மற்றும் தீர்வு ஆகியவற்றில் பெண்கள் வகிக்கும் முக்கிய பாத்திரங்களை மேம்படுத்துவதற்காக ஏப்ரல் 24 அன்று பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு கருத்தரங்கை உள்ளடக்கியுள்ளது.

இதன்படி 70 அமெரிக்கப் பணியாளர்கள் இலங்கை இராணுவப் பிரிவினருடன் இதன்போது பயிற்சிகளில் ஈடுபடவுள்ள நிலையில், CARAT Sri Lanka இருதரப்பு கடல்சார் பயிற்சியின் இந்த ஐந்தாவது மறு செய்கையானது, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்கைப் பேணுவதற்கு அமெரிக்கா மற்றும் இலங்கையின் வலுவான கூட்டாண்மை மற்றும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது" என கூறப்பட்டுள்ளது.