Breaking News

ஜப்பானில் ‘ஒலிம்பிக் சுடர்’ ஓட்டம் ஆரம்பம்.

ஜப்பானில்  ‘ஒலிம்பிக் சுடர்’ ஓட்டம் ஆரம்பம்.

 ஜப்பானில் நடைபெற உள்ள  ‘டோக்கியோ-2020’ ஒலிம்பிக் போட்டிக்கு முன்னோட்டமாக ஒலிம்பிக் சுடர் ஓட்டம்  தொடங்கியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கு முன்னோட்டமாக பராம்பரிய ஒலிம்பிக் சுடர் ஓட்டம் நேற்று தொடங்கியது.  அணு உலை வெடிப்பு, ஆழிப்பேரலை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டதுதான்  ஜப்பானின் வடக்குகிழக்கு நகரம் புகுஷிமா. அந்த நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் ஒலிம்பிக் சுடர் ஓட்டம் தொடங்கியது. முதலில் ஜப்பான் கால்பந்து வீராங்கனை அசுசா இவாஷிமிசு ஒலிம்பிக் சுடரை ஏற்றினார். தொடர்ந்து விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் ஒலிம்பிக் சுடரை ஏந்தி ஓடுகின்றனர்.