Breaking News

அயலான் படத்தின் முதல் ஷோ - சிவகார்த்திகேயன் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தைகள்..!!

அயலான் படத்தின் முதல் ஷோ - சிவகார்த்திகேயன் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தைகள்..!!

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாகியும் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாததால் ஒருவேளை படம் கைவிடப்பட்டதா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது. அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இந்த படம் இன்று வெளியாகும் என அறிவித்திருந்தது. அதன் படி பல தடைகளை தாண்டி இன்று அயலான் படம் திரையரங்குகளில் வெளியானது.

தமிழகம் முழுவதும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள், திரையரங்குகளில் கொண்டாட்டத்தை துவங்கியுள்ளனர். இந்த நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், அனைத்து வெற்றிக்கும் பின்னும் ஒரு வலிநிறைந்த கதை இருக்கும். ஒவ்வொரு வலிநிறைந்த கதைக்கும் பின்னும் ஒரு வெற்றியான முடிவு இருக்கும். அதனால் வலியை ஏற்றுகொண்டு வெற்றிக்கு தயாராகுங்கள் என பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து திரையரங்கில் முதல் ஷோவை பார்க்க வைத்த நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சிரித்து ரசித்து பார்க்க ஒரு நல்ல படமாக இருக்கும். குடும்பத்தோடு எண்டெர்டெயின்மெண்ட செய்யவிரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல அனுபவத்தை கொடுக்கும். ஜஸ்ட் கோ அண்ட் என்ஜாய், நம்பி வாங்க சந்தோஷமா போங்க என கூறியுள்ளார்.