Breaking News

கம்பஹாவில் இருவர் உயிரிழந்ததற்கு கொவிட் தடுப்பூசி ஏற்றியது தான் காரணமா?

கம்பஹாவில் இருவர் உயிரிழந்ததற்கு கொவிட் தடுப்பூசி ஏற்றியது தான் காரணமா?

கம்பஹாவில் கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவை பிரதிப்பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத்தை மேற்கோட்காட்டி ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.                                                                                                                                                                                                                                                    

இந்த இரண்டு மரணங்களுக்கும் கொவிட் தடுப்பூசி செலுத்தலுக்கும் இடையில் ஏதேனும் தொடர்பு உண்டா என்பது குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெவகெதர பகுதியைச் சேர்ந்த 57 வயது மதிக்கத்தக்க ஒருவர் தடுப்பூசி செலுத்தப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் இன்றைய தினம் மரணித்துள்ளதாக திவுலபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசி ஏற்றப்பட்ட மற்றுமொருவரும் இவ்வாறு உயிரிழந்ததாக குறித்த ஆங்கில நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தொடர்பான மேலதிக தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக சுகாதார சேவை பிரதிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.