Breaking News

Sandringham Dairy Shop இல் நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் - அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்களை வெளியிட்ட பொலிஸார்...!!

Sandringham Dairy Shop இல் நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் - அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்களை வெளியிட்ட பொலிஸார்...!!

Sandringham இல் உள்ள Dairy Shop இல் நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையில்‌..

பாதிக்கப்பட்ட நபர் கடையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கத்தியால் குத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளி இரவு 8 மணியளவில் Cash register ஐ எடுத்துக் கொண்டு கடையை விட்டு வெளியேறி Duncan Avenue வை நோக்கி சுமார் 100 மீட்டர் நடந்து சென்றுள்ளார்.

பின்னர் அவர் ஒரு வீட்டு குப்பைத் தொட்டியில் உள்ளே Cash register ஐ வைப்பது சிசிடிவி காட்சிகளில் காணப்படுகிறது.

இந்த கட்டத்தில் பாதிக்கப்பட்டவர் அவரை அணுகியுள்ளார், அங்கு ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது, அந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவருக்கு பல கத்தி குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர் அவசரகால சேவைகளை அழைக்க கடைக்கு திரும்பி வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்‌தில் உயிரிழந்த நபர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டவர் என கூறப்படுகிறது.