Breaking News

மேல் மாகாண மக்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

மேல் மாகாண மக்களுக்கு  இன்று முதல் தடுப்பூசி

மேல் மாகாணத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா  தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று(15) ஆரம்பமாகவுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய, பொதுமக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை இன்றைய தினம் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தின் கொவிட்  19 அவதானமிக்க பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கே முதற்கட்டமாக இந்த தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.